IMPORTANT QUR'AN VERSE

‎3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

FLASH

இன்ஷா அல்லாஹ்! இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மட்டும் சொல்வோம்! எவரும் எவருக்கும் பயணளிக்காத நாளை/மஹஸரை பயந்து கொள்வோம்!! ஷிர்க்கையும் பித்அத்தையும் முழுமையாக ஒழிப்போம்!! //

வெள்ளி, 29 ஜூன், 2012

வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (பகுதி – 01)


உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமான இஸ்லாம் மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அறிந்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.
நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது.நமது அன்றாடப் பிரச்சினைகள்,குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய தெளிவான ஒரு கண்ணோட்;டத்தையும் இஸ்லாம் நமக்குத் தருகிறது.
இஸ்லாம் சொல்லும் பொருளாதராக் கொள்கைகளில் நாம் சரியாகப் புரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் தான் வட்டி தொடர்பான இஸ்லாமிய நிலைபாடு. நரகத்திற்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தரும் இந்த வட்டிக் கொடுமை பற்றிய அனைத்து விதமான விளக்கங்களையும் நாம் இந்தத் தொடரின் மூலம் சுறுக்கமான தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறோம்.
வட்டியின் விபரீதம் என்ன? வட்டியில் சின்ன வட்டி, பெரிய வட்டி என்று பிரிப்பதற்கு ஏதும் முகாந்திரம் உண்டா? சின்ன வட்டி ஹழாலானது என்று ஒரு சிலர் வாதாடுகிறார்களே அதைப்பற்றிய உண்மை நிலை என்ன? வங்கி வட்டியின் நிலைபாட்டை இஸ்லாம் தடை செய்கிறதா? போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களை இந்தத் தொடரில் நம்மால் முடிந்தவரை தெளிவுபடுத்த நினைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
இந்தத் தொடரில் முதலாவதாக வட்டி பற்றி திருக்குர்ஆன் கூறும் தகவல்களை முதலில் பார்த்து விட்டு வட்டியைப் பற்றிய சட்டங்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.
வட்டியை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது(ஹராமாக்கப்பட்டுள்ளது).
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131) 
நம்பிக்கை கொண்டோரே ! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)
வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275) 
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)
வட்டி அழிக்கப்பட்டுதர்மம் வளர்க்கப்படுகிறது.
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (2:276)
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(2:276)
வட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹழாலானதாகும்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275) 
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)
வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (2:278)
நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)
வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான். 
فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)
நபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது. 
فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (4:160.161)
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)
வட்டி செல்வத்தை பெருக்காதுஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.
وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ (30:39)
மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)
மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வட்டியின் விபரீதங்கள் பற்றி குறிப்பிடப்படுபவைகள். வட்டியை இறைவன் தடை செய்ததாகக் குறிப்பிடும் வசனங்களை மாத்திரம் நாம் பார்த்தோம்.
வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?
அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:    குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகுஅவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்).  (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்கஅவர்கள் நபி (ஸல்) அவர்கள்நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும்உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள்.    (புகாரி – 2086,2238)
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன்,உண்ணக் கொடுப்பவன்எழுதுபவன்சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் – 2995)
வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.
பெரும்பாவங்களில் ஒன்று.
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்கள்பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள்அல்லாஹ்வின் தூதரே! அவை யாவைஎன்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது,சூனியம் செய்வதுமுறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பதுஅநாதைகüன் செல்வத்தை உண்பதுபோரின்போது புறமுதுகிட்டு ஓடுவதுஇறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று  கூறினார்கள்.( புகாரி – 6857)
ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
வட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…………….
tnanks rasminmisc.com

சனி, 23 ஜூன், 2012

”மம கட்சியின் சமுதாயத் துரோகம்” – பொதுக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு


24-6-2012 ஞாயிறு இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை மமகட்சியின் சமுதாயத் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மண்ணடியில் நடக்கும் பொதுக்கூட்டம் நேரடியாக ஒளிபரப்பாகும். பயிற்சி மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கூறுகெட்ட அறிக்கை வெளியிட்டுள்ள ஜால்ரா சட்டமன்ற உறுப்பினரின் மடமையையும் சமுதாயத்துக்குச் செய்த துரோகத்தையும் பீ.ஜைனுல் ஆபிதீன், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் அம்பலப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ்
இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

லால்பேட்டையில் முஸ்லிம் லீக் தமுமுக மோதல்


லால்பேட்டை,ஜுன் 23
/
நாளை 24.06.2012 லால்பேட்டை நகரில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,அப்துல் ரஹ்மான் எம்.பி.ஆகியோர் கலந்து கொள்ளும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி அக்கட்சியினர் தலைவர்களை வரவேற்க புது பஜார் சந்திப்பு பகுதியில் கொடி,பேனர்கள் வைத்துள்ளனர்.
/
நாலை லால்பேட்டை அருகில் உள்ள மானியம் ஆடூர் கிராமத்திர்க்கு தமுமுக,ம ம க வின் தலைவர் வருகிறார் அப்போது லால்பேட்டை புது பஜாரில் கொடி ஏற்ற ஏர்பாடு செய்து பஜார் மற்றும் வடக்கு தெரு பகுதியில் தமுமுக, மமக கட்ச்சியினர் தோரனம் கட்டினர் ஆனால் தோரனம் கட்டுவதில் முஸ்லிம் லீக், தமுமுக, மமக கட்சிக்கிடையே இரண்டு நாட்களாக கருத்து வேறுபாடாக இருந்து வந்தது.
/
இன்று பிர்பகள் 12.30 மணியளவில் புது பஜாரில் உள்ள முஸ்லில் லீக் அலுவலகம் அருகில் முஸ்லிம் லீக் கட்சியினர் தோரனம் கட்டினர் அப்போது தமுமுக தொண்டர்கள் அங்குவந்து இந்த இடத்தில் நாங்கள் கொடுயேற்ற உள்ளோம் எனவே இங்கு தோரணம் கட்டகூடாது என்று தடுத்தனர் அதனால் முஸ்லிம் லீக் .தமுமுக இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது ஆபாசாவார்தைகள் அல்லி வீசப்பட்டது இதனால் லால்பேட்டையில் பெரும் பதட்டமான சூல்நிலை ஏற்பட்டது உடன் காவல் துரைக்கு தகவல் தெறிவிக்கப்பது உடன் டி எஸ் பி தலைமையில் மத்திய சிறப்புப்படை சம்பவ இடத்திர்க்கு வந்து முகாமிட்டு அமைதி படுத்தியது.
/
மதியம் 2.30 மணியளவில் காட்டுமன்னார்குடி காவல் நிலையத்தில் இருதரப்பினர்கள் பேச்சுவர்த்தை நடைப்பெற்றது அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லால்பேட்டை உள் பகுதியில் இரு அணிகளும் எந்த தோரனமும் கட்டக்கூடாது எனவும் கட்டிய அனைத்து தோரணங்களையும் அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.
/
மாலை 5.30 மணியளவில் காவல்துரை அதிகாரிகள் முன்னிலையில் அனைத்து தோரணங்களும் அகற்றப்பட்டது.

ஞாயிறு, 13 மே, 2012

திருக்குர்ஆனை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்க வேண்டும்?




கிறுத்துவ நண்பர்களே! நீங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ள பைபிளை நாங்களும் இறைவனால் வழங்கப்பட்டது என நம்புகிறோம், ஆனால் அது பாதுகாக்கப் படாத (அதாவது அதில் உங்களின் மூதாதயர்களின் சொந்தக் கறுத்துகளும் கலந்துவிட்ட) காரணத்தால் அதனை இப்போது அமல் படுத்த கூடாது என்கிறோம்.
இறைவனால் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆன் ஆகும். மேலும் அது யுகமுடிவு வரை பாதுகாக்கப்படும் என்று இறைவனால் உத்திரவாதம் பெற்றுள்ளதுமாகும்.
சரி, திருக்குர்ஆனை மட்டும் இறைவன் ஏன் பாதுகாக்க வேண்டும்?
இதற்கு பதிலளிப்பதற்கு முன் இறைவேதத்தின் முக்கிய பணி என்ன என்பதில் தெளிவுபெறுவது உகந்தது. "மறுமையில் நடக்கவிருக்கும் நிலைமைகளைக் கூறி எச்சரிக்கை செய்வதும், மனிதனின் வாழ்கைக்கு தேவையான சட்டங்களைக் கூறுவதும் இறைவேதத்தின் முக்கிய பணியாகும்".
ஆதம் நபி காலத்தில் சகோதரியை திருமணம் செய்ய அப்போதுள்ள இறைச்சட்டம் அனுமதித்து. இறைவனால் கொடுக்கப்பட்ட சட்டம் என்றாலும் இன்று அது செல்லாது. இதனை அறிந்ததாலேயே அச்சட்டத்தைப் பாதுகாப்பதாக இறைவன் வாக்களிக்க வில்லை. இதுபோன்ற காரணங்களாலே இதற்கு பின் வந்த வேதங்களும் (பைபிள் வரை) பாதுகாக்கப்படவில்லை.
நாம் இப்போது யுகமுடிவின் சமீபத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆதலால் இறைவேதத்தின் கடைசி பதிப்பு நமக்கு வழங்கப்பட்டு விட்டது. அதுவே திருக்குர்ஆன் ஆகும். இதிலுள்ள சட்டங்களை யுகமுடிவு வரை அமல் படுத்துவதே வெற்றிக்கு ஒரே வழி ஆகும்.
(திருக்குர்ஆன் இறைவேதம்தான் என்பதில் தெளிவுபெற THE BIBLE AND QURAN IN THE LIGHT OF SCIENCE-MARIS PUGAIL, ஏசு இறைமகனா?-பி.ஜெ. போன்ற நூல்களும், டாக்டர்.ஜாகிர் நாயிக் Vs வில்லியம் கேம்பில் போன்ற விவாதங்களும் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்.)
Thank you!
அல்லாஹ்வே முற்றும் அறிந்தவன்.

சனி, 14 ஏப்ரல், 2012

கிறித்தவ சபைகளுக்கு எதிராக மட்டும் ஏன் பிரச்சாரம் செய்ய வேண்டும்?


கேள்வி :
சமீபகாலமாக, கிறித்தவ மதத்தை, தாங்களும், உங்களது இயக்கத்தைச் சார்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றீர்களே ஏன்?
எங்கள் விசுவாசத்தை பலவீனப்படுத்தி, எங்கள் பாதிரிமார்களின் மீது (விவாத) கொலை வெறி தாக்குதல் நடத்துவது ஏன்?
இது போல் இந்து மதத்தை விமர்சிக்கவில்லையே ஏன்?
மற்ற மதத்தினரை விமர்சிக்கக்கூடாது; உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்குஎன்ற குர்ஆன் வசனத்தையெல்லாம் மறந்துவிட்டீர்களா? ஆனால், நாங்கள் குர்ஆன் வசனத்தை கடைபிடித்து வருகின்றோம்.  எந்த மதத்தையும் விமர்சிப்பதில்லை.
ஜெஸ்ஸி ராணி - மங்கலம்பேட்டை 


பதில் :

இந்து மதத்தினர் தங்கள் மதத்தை பின்பற்றுவதோடு வைத்துக் கொள்கின்றனர். முஸ்லிம்களிடமோ, கிறித்தவர்களிடமோ எங்கள் மார்க்கமே சிறந்தது எனக்கூறி பிரச்சாரம் செய்வதில்லை. பணம் கொடுத்து ஆள் பிடிப்பதில்லை. ஏழைகளின் வறுமையைப் பயன்படுத்தி தங்கள் கல்விக்கூடங்களில் இலவசக் கல்வி தருவதாக ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்வதில்லை. நோயாளிகளின் நெருக்கடியைப் பயன்படுத்தி இலவச சிகிச்சை என்று ஆசை காட்டி தங்கள் மதத்துக்கு அழைப்பதில்லை.

ஆனால், கிறித்தவ பிரச்சாரகர்களின் முழு நேர வேலையே இதுவாகத்தான் உள்ளது.

அது மாத்திரமில்லாமல் இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்ட வசனங்களை எடுத்துக்காட்டி,  தங்களின் தவறான கொள்கையைத் தான் இஸ்லாம் சொல்கின்றது என்று சொல்லி, “குர்ஆனில் ஈஸாஎன்று நூல் வெளியிடுகிறார்கள்.

முஸ்லிம்கள் பயன்படுத்தும் கியாமத் நாள் என்ற பெயரில் நூல் வெளியிட்டு முஸ்லிம் அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கின்றனர்.

இந்த பாதிரிகள் ஆலிம் அப்துல்லாஹ்,  மவ்லவி பிலால் ஆகியோர் நற்செய்தி கூட்டங்களில் பேசுவதாக விளmபரம் செய்து வம்புக்கு இழுக்கின்றனர். ஆனால் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள்; செத்த பிணங்கள் உயிரோடு எழும்பி வருகின்றன  என்ற நிகழ்ச்சி போல் இதுவும் செட்டப் நிகழ்ச்சிதான். 

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் திட்டி தபால் பெட்டி எண் மட்டும் போட்டு நோட்டீஸ்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

டெலிபோன் டைரக்டரியில் உள்ள முஸ்லிம்களின் முகவரிகளைத் தேடிப் பிடித்து அவர்கள் முகவரிக்கு தங்கள் கிறுக்குத்தனமான பிரசுரங்களை அனுப்பி வைக்கின்றனர்.

முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து நற்செய்தி என்ற பெயரில் தங்கள் மதத்தில் சேருமாறு கூறும் அளவுக்கு இவர்களின் நடவடிக்கை எல்லை மீறிப்போய்க் கொண்டு உள்ளது.

தங்கள் கல்விக் கூடங்களில் அனைவரும் இயேசுவைத் தான் வணங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

தங்கள் கொள்கை தான் சரியானது என்றும், இஸ்லாம் பொய்யானது என்றும் சித்தரிக்கும் இவர்களை நாம் எதிர்கொள்ளும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

ஆபாசப் புத்தகத்தை வேதமாக வைத்துக் கொண்டு எங்களை உங்கல் மதத்துக்கு அழைக்க வந்து விட்டீர்களா? பொய்களையும் புரட்டுகளையும் முட்டாள்தனமான கருத்துக்களையும் சிறந்த கொள்கை என்று சொல்கிறீர்களா? என்று கேட்கக் கூடிய வகையில் அனைத்து முஸ்லிம்களையும் தயார்படுத்தும் அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

இதனால் தான் விவாதக் களத்தில் சந்தித்து கிறித்தவ மதத்தை எங்களிடம் பிரச்சாரம் செய்ய அவர்களே வெட்கப்படும் நிலையை ஏற்படுத்தவே அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்க வற்புறுத்துகிறோம்.

இந்துக்களின் ஊர்களில் இவர்கள் வாலாட்டினால் அவர்கள் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுக்கும் சமபவங்களை நாம் பார்க்கிறோம். அது போல் செய்யாமல் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு பிரச்சாரம் செய்யுங்கள் என்ற அறிவுப்பூர்வமான நெருக்கடியை தான் ஏற்படுத்துகின்றோம்.

இத்தனை ஆண்டுகளாக கிறித்தவப் பிரச்சாரம் என்ற பெயரில் நேர்மையற்ற வழிகளைக் கடைப்பிடித்து வரும் பாதிரிமார்களைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.
தானுண்டு தன் வேலையுண்டு என்று அவர்கள் இருந்தால் அவர்களை விரட்டிச் சென்று விவாதிக்கும் அவசியம் ஏற்படாது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம்-அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு



இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானம் ‍அதை ஊருகாயாக்கும் தமிழ் நாடு
ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிகொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார்.நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலலிக்காமல்) பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.அப்போது (அங்கிருந்து மக்களில் சிலர்), நபி(ஸல்) அவர்கள் அவர் கேட்ட கேள்வியை செவியுற்றார்கள்,ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி(ஸல்) அவர்கள் விரும்ப வில்லை.மற்ற சிலர் அவர் கேட்ட கேள்விஅயி நபி (ஸல்)கேட்டனர் என்றனர். நபி(ஸல்) தமது பேச்சை முடித்து விட்டு."மறுமை நாளை பற்றி என்னிடம் கேள்வி கேட்டவர் எங்கே என்றனர்.உடனே அல்லாஹ்வின் தூதரே நான்தான் என்றார்.அமானிதம்_அடைக்கலம் பாழ்படுத்தபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்"என்று சொன்னார்கள்.அதற்கு அந்த கிராமவாசி அது எவ்வாறு பாழ்படும் என்றார்.அதற்கு நபி (ஸல்) இவ்வாறு பதிளலித்தார்கள்:அதிகாரம் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கபட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்,என்று பதிலலித்தார்கள்.
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_59
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)ஒரு கிராமவாசியிடம் நம்பகத்தன்மை பாழ்பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம் என்று கூறினார்கள்.அவர் அல்லாஹ்வின் தூதரே அது எவ்வாறு பாழ்படுத்தபடும் என்று கேட்டார். ஆட்சி அதிகாரம் நீதி நிர்வாகம் போன்ற எந்தபொறுப்பும் அதற்கு தகுதியற்றவரிடம் ஒப்படைக்கபடும்போது மறுமை நாளை எதிர்பார்த்துகொள்,என்று பதில்லித்தார்கள்
அபூ ஹுரைரா ரலி_புஹாரி_5496

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

தப்லீக் ஜமாத்: பெரியார்களின் கட்டுகதைகள்

தனி மனித வழிபாடு
இட்டுகட்டபட்ட பொய்கதைகள்
பொய்சொல்லி மார்க்க பிரச்சாரம் செய்தல்
மார்க்கத்தை சுருக்கி கொள்ளுதல்
குர் ஆன் ஹதீஸ்களுக்கு முரணான செய்திகள்



பெரியார் கதைகள்

இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக பொய்யான கதைகளையும் கப்சாக்களையும் கூறுகின்றனர்.

பெரும்பாலும் இந்த கப்சாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றது. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றைச் சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இருப்பதை காணலாம். 

மனித குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமாக பரவி கிடக்கின்றது. அப்படியிருக்க இந்த புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது.



தப்லீக் ஜமாத் பெரியார்கள்
தப்லீக் ஜமாத் பெரியார்கள்
தப்லீக் ஜமாத் பெரியார்கள்
தப்லீக் ஜமாத் பெரியார்கள்


தனிமனித வழிபாடு

இஸ்லாம் அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஷாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முசாபாஹா செய்யும் பழக்கத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முசாபாஹா  செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முசாபஹா செய்கின்றனர்.

இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக்  கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது.

ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, இந்த உலகத்தில் வாழும்போதே அவர்களால் இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப் போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள நலப் பணிகளை செய்தனர்.
கடமை தவறுபவர்கள்

ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய  கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப் போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினாôல் இதுவும் வணக்கமாகி விடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது.

இஸ்லாத்தின் உபதேசங்கள் கொள்கை கோட்பாடுகள் சட்டதிட்டங்கள் ஆகியவை அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளது.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக குறிப்பிட்ட சில நாட்களை இதற்கு என ஒதுக்குவது மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் தான் ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்.

இந்த சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத் என்று பல நாட்களை ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர். குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள் நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது. குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது என்று கூறுவர்.

ஆனால் ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இவர்களின் இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தான் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்.

தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்தச் சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.

தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்களாம்.

சாப்பாட்டு விஷயத்தில் இறைவன் மீது பழிபோடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டு விடுவதில்லை.

மேலும் தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக் கொள்கின்றனர்.


இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள

நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை  இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

குர்ஆன் நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளைத் செய்யக் கூடாது  எனத் தடுக்கவும் செய்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த  அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது  தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாக சென்று விடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர்.

இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம். தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியை புறக்கணித்து விட்டனர்.

நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை  எதிர்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கி விட்டால் அது வேறு விஷயம்.

ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை  ஒருக்காலும் ஏற்க முடியாது.

சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை

இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி  உள்ளது. தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர். இவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை, மூட நம்பிக்கைகள் மற்றும் எல்லா அநாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணைவைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூடநம்பிக்கைகளில் மூழ்கியும் இருந்தனர். வட்டி வரதட்சணை போன்ற பாவங்களைச் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.

இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடிக்கிவிடப்பட்டு தீமைகளுக்கு எதிராகக் குரல் ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்த தவறான கொள்கையும் ஒரு காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது.

தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை.

தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  எனவே தான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாக கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூட தடுமாறாமல் இவற்றைச் செய்து விடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.

இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியைப் புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வரவும் முடியாது.

அடிப்படையில் கோளாறு

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது.

தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸை என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும் ஹதீஸ்களுடன் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். இந்த சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்

தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையைத் தளர்த்திக் கொண்டனர்.

இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின் கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன் செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தப்லீக் உலமாக்களும் கப்று வழிபாட்டை ஆதரிக்கும் பரேலேவிகளும் கொள்கையில் மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள் பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை. போர்க்கொடி உயர்த்தவில்லை.

மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு,  நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.

தப்லீக் அணியில் முன்னணி வகித்து சமீபத்தில் காலமான கலீல் அஹ்மது கீரனூரி அவர்கள் நமக்கு எதிராகப் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்கள் நம்மை மேடையில் பிளந்தெடுத்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!

அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம், அல்ஹம்து லில்லாஹ்!

இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.